கூரியர் மூலம் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக சப்ளை செய்த 4 பேர் கைது.. 800 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார்

0 792

திருச்சி மாவட்டம் உறையூரில் கூரியர் சேவை மூலம் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக சப்ளை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உறையூரில் உள்ள ஒரு கூரியர் அலுவலகத்திற்கு மும்பையில் இருந்து வலி நிவாரண மாத்திரைகள் சட்டவிரோதமாக தொடர்ச்சியாக அனுப்பப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, கூரியர் பார்சலை வாங்க வந்தவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்களிடமிருந்து 800 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இளைஞர்கள் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தினால் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments