அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு

0 859
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு

மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்திய போது, தங்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த புகாரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசு மருத்துவரை மிரட்டில் லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஒன்றாம் தேதி லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அங்கித் திவாரி அறைக்குள் சோதனை நடத்த அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் சென்ற போது தங்களை பணி செய்ய விடாமல் அங்கிருந்த அதிகாரிகள் தடுத்ததாக, லஞ்சஒழிப்பு போலீசார் தரப்பில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments