வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யவில்லை : இ.பி.எஸ்.

0 619

வானிலை மையத்தை குறை கூறிக்கொண்டு பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை தி.மு.க. அரசு செய்யாமல் தட்டிக் கழிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை சீற்றம் என்றால் எதற்கும் தயார் நிலையில் அரசு இயந்திரங்களை மாநில அரசு வைத்திருக்க வேண்டும் என்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

அதேபோல், உடனடியாக தமது சொந்த நிதியைப் பயன்படுத்தி மாநில அரசு நிர்வாகம் நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் பெய்த கனமழையில் தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டபோது, முதலமைச்சரோ மக்கள் மீது சிறிதும் அக்கறையின்றி தேர்தல் கூட்டணி குறித்து பேச டெல்லிக்குச் சென்றுவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments