நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் ரத்து....ரயில் தண்டவாள சீரமைப்புப் பணிக்காக 2 நாட்களுக்கு ரயில்கள் ரத்து

0 3486

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால், மேலும் இரண்டு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி நெல்லை-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-நெல்லை இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

வாஞ்சிமணியாச்சி-திருச்செந்தூர் முன்பதிவில்லா ரயில் நெல்லை-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments