விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்.. சுங்கச்சாவடிகள், முக்கியச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

0 1012

தமிழகத்தில் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகள் மற்றும் பாலாறு மேம்பாலத்தில் நீண்ட தூரம் வாகனங்கள் நிற்கும் நிலை ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியிலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து செல்ல நீண்ட நேரம் ஆன நிலையில், ஜானகிபுரம் பகுதியில் அடுத்தடுத்து மூன்று கார்கள் விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.மறுபுறம், சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments