மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாக பிரபல ஊக்கமளிக்கும் பேச்சாளர் விவேக் பிந்த்ரா மீது வழக்குப்பதிவு

0 875

புகழ்பெற்ற ஊக்கமளிக்கும் பேச்சாளரும், பல்வேறு கின்னஸ் சாதனைகளை படைத்தவருமான தொழிலதிபர் விவேக் பிந்த்ரா மீது அவரது மனைவி யானிகாவை அடித்துத் துன்புறுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருவருக்கும் கடந்த 6ஆம் தேதி திருமணமான நிலையில், யானிகாவின் சகோதரர் வைபவ் நொய்டா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், யானிகாவை விவேக் பிந்த்ரா அறையில் அடைத்து வைத்து அடித்துக் காயப்படுத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. யானிகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், காவல்துறையினர் விவேக் பிந்த்ரா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments