எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரம் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

0 839

எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் சி.பி.சி.எல். வளாகத்திலிருந்து வெள்ள நீரோடு கலந்துவந்த எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான அரசின் செய்திக் குறிப்பில், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஏற்கெனவே 6 ஆயிரம் ரூபாள் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து கூடுதலாக எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 12 ஆயிரத்து 500 ரூபாய் வீதமும், படகு ஒன்றுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மண்டலம் ஒன்றில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 7 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் வழங்கப்படுவதாக, தமிழக அரசு கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments