மழை வெள்ளத்தில் வீடு இடிந்து விட்டதால் முதல்முறையாக சென்னையில் தான் விளையாடும் போட்டியை பெற்றோரால் பார்க்க முடியாது என தமிழ்தலைவாஸ் கபடி அணி வீரர் மாசானமுத்து வேதனை

0 1224

மழை வெள்ளத்தில் வீடு இடிந்து விட்டதால் முதல்முறையாக சென்னையில் தான் விளையாடும் போட்டியை பெற்றோரால் பார்க்க முடியாது என தமிழ்தலைவாஸ் கபடி அணி வீரர் மாசானமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள ப்ரோ கபடி லீக் தொடரில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணியில் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தைச் சேர்ந்த வீரர் மாசானமுத்து இடம் பிடித்துள்ளார்.

தான் விளையாடும் போட்டியை பார்ப்பதற்காக பெற்றோருக்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்ததாகவும், வெள்ளத்தில் வீடு இடிந்து விட்டதால் அவர்களால் சென்னைக்கு வர முடியாத சூழல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

சொந்த மண்ணில் ரசிகர்கள் மத்தியில் விளையாடுவது என்பது கூடுதல் அழுத்தம் என்றாலும் வெற்றி பெற முயற்சிப்போம் எனவும், இளைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினால் அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளதாகவும் வீரர் அபிஷேக் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments