திருத்தப்பட்ட 3 குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்...காலனித்துவ கால சட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளது: பிரதமர் மோடி

0 1772

திருத்தப்பட்ட 3 குற்றவியல் சட்ட மசோதாக்கள் மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நேற்று குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

குற்றவியல் சட்ட மசோதா நிறைவேறியதன் மூலமாக காலனித்துவ காலத்து சட்டங்களை முடிவுக்கு கொண்டுவந்து, புதிய வரலாறு படைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 4 ஆம் தேதி துவங்கிய குளிர்கால கூட்டத் தொடரின் போது, மக்களவையில் கலர் புகை குண்டு வீசப்பட்டது குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சுமார் 145 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தேர்தல் கமிஷனர்கள் நியமனம், பத்திரிகை பதிவு மசோதா, தொலைத்தொடர்பு மசோதா ஆகிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

குளிர்கால கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஒருநாள் முன்னதாகவே இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments