பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலி... தாக்குதலுக்கு பிறகு தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவன்

0 1335

மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசின் தலைநகரான ப்ராக் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த சார்லஸ் பல்கலைக்கழகத்தில் சிலர் மாடிகளிலிருந்து கீழே குதித்தும், வெளியே ஓடியும் தப்பித்ததாகவும் எனினும் 25 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கி சூடு நடத்தியவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவித்த போலீஸார், பல்கலைக்கழகத்திலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த மாணவனின் வீட்டிற்குச் சென்ற போது அவரது தந்தையும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்ததால் தொடர்ந்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments