இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் முடிவை நிறுத்தி வைத்துள்ளது அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம்

0 1168

இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் மறுபரீசிலனை செய்து வருவதாக கூறப்படுவதால், சென்னை அருகே மறைமலைநகரில் உள்ள அதன் ஆலையை விற்பனை செய்யும் முடிவை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சுமார் 350 ஏக்கரில் அமைந்துள்ள அந்த ஆலை, ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கார்களையும், 3 லட்சத்து 40 ஆயிரம் என்ஜின்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.

அந்த ஆலையை விற்பனை செய்வது தொடர்பாக ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்துடன் ஃபோர்டு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அதனை விற்பனை செய்யும் முடிவை நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments