ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகளுடன் சிறப்பு ரயில் சென்னை புறப்பட்டுச் சென்றது.

0 1190

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகளுடன் சிறப்பு ரயில் சென்னை புறப்பட்டுச் சென்றது.

தாதன்குளம் அருகே மண் அரிப்பால் தண்டவாளம் சேதமடைந்ததை அடுத்து ஸ்ரீவைகுண்டம் அருகே ஞாயிறு இரவு 9 மணியளவில் செந்தூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது.

ரயிலிலேயே சிக்கி இருந்த பயணிகளுக்கு அருகே உள்ள கிராம மக்கள் உணவளித்து வந்தனர். ஹெலிகாப்டர் மூலமும் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.

தண்ணீர் மேலும் வடிந்த நிலையில், பயணிகள் அனைவரும் 13 பேருந்துகள் மூலம் வெள்ளூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு கூட்டிச் செல்லப்பட்டனர்.

957 பயணிகளுடன் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் சென்னைக்குப் புறப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments