நாடாளுமன்றத்தில் 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம் குறித்து இன்று இண்டியா கூட்டணி ஆலோசனை... சோனியா, கெஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், மம்தா பங்கேற்பு

0 980

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 92 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, இண்டியா கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளன.

எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு, சர்ச்சைக்குரிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இதனிடையே, டெல்லியில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் சோனியா, ராகுல், மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

எம்.பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம், மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments