தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் பாதிப்பு குறித்து தலைமைச் செயலர் சிவதாஸ் மீனாவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

0 1404

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் பாதிப்பு குறித்து டெல்லி சென்றுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவ்தாஸ் மீனா, கனமழை பாதிப்புகளில் இருந்து விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருவதாகத் தெரிவித்தார்.

ஸ்ரீ வைகுண்டத்தில் ரயில் நிலையத்தின் அருகிலும், அங்குள்ள கல்யாண மண்டபத்திலும் பயணிகள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்பு துறையினர் படகுகள் மூலம் அவர்களை மீட்க சென்ற போதும் அந்த பகுதியில் தண்ணீரில் படகுகள் செல்வதில் சிரமமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments