ரெட் அலர்ட் எதிரொலி.. 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிப்பு

0 3903

அதி கனமழை எதிரொலியாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் கடந்த 13ம் தேதி தொடங்கிய அரையாண்டுத் தேர்வுகள், 22ம் தேதி முடிய உள்ள நிலையில், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments