ஆளில்லாத டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தும் வலிமையைப் பெறும் இந்தியா.. மறைந்திருக்கும் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும்..!!

0 933

மறைந்திருக்கும் இலக்குகளை குறிவைத்துத் தாக்குதல் தொடுக்கும் வகையில், சுயமாக இறகுகளை கட்டுப்படுத்தி பறக்கும் ஆளில்லாத டிரோன்களை இந்திய வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

இவ்வகை டிரோகன்கள் நவீன யுத்தகாலத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. சியாச்சின் போன்ற மலைப்பாங்கான, உயரமான இடங்களில்  களப்பணியில் ஈடுபடும் வீரர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம் என்பதால், இவ்வகை டிரோன்களை இவ்விடங்களில் பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

தேஜாஸ் ஜெட் விமானங்கள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் உலகிற்கு தனது வலிமையை வெளிப்படுத்திய இந்தியா இப்போது ஆளில்லாத டிரோன் படையை தயார் செய்துள்ளது. அண்மையில் கர்நாடகாவில் இவ்வகை டிரோன்களை டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments