கேரளாவில் பரவும் புதிய திரிபான ஜே.என்.1கொரோனா வைரஸ் ... 768 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழப்பு

0 1667

கேரளாவில் தற்போது கொரோனாவின் புதிய திரிபான ஜே.என்.1 வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக, கொரோனா திரிபுகளை ஆய்வு செய்துவரும் மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் பேட்டியளித்த அம்மையத்தின் தலைவர் என்.கே.அரோரா, புதிய வைரஸ் திரிபு மேல் சுவாசக் குழாயை பாதிக்கும் என்றும், காய்ச்சல், இருமல், சோர்வு, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, தலைவலி போன்றவை முக்கிய அறிகுறிகள் என்றும் கூறியுள்ளார்.

இந்தப் புதிய கொரோனா திரிபு வேகமாகப் பரவும் ஆபத்து உள்ளதாகவும், அதனால் அதுகுறித்து தொடர் கண்காணிப்பும் ஆய்வும் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பரவும் ஜே.என்.1 வைரஸ் திரிபு, கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. தற்போது சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments