கேரளாவில் மகள் கொலை வழக்கில் சிறைக்குச் செல்லும் வழியில் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தந்தை தற்கொலை

0 2929

கேரள மாநிலம் கொல்லத்தில் மகளைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட தந்தை நீதிமன்ற விசாணைக்குப் பின் சிறைக்குச் செல்லும் வழியில் ரயிலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாவேலிக்கரை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீமகேஷ் என்பவர் கடந்த ஜூன் மாதம் தனது மனைவி மற்றும் 6 வயது மகள் நட்சத்திராவை அரிவாளால் வெட்டினார். இதில் சிறுமி உயிரிழந்த நிலையில், ஸ்ரீமகேஷ் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்த விசாரணைக்கு ஸ்ரீமகேஷை நீதிமன்றத்திற்குச் சென்ற போலீசார் மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது  சாஸ்தான்கோட்டை ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஸ்ரீமகேஷ் ரயிலிலிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments