ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பதவியேற்றார் பஜன்லால் சர்மா... பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு

0 534

ராஜஸ்தான் மாநிலத்தின் 14-வது முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவி ஏற்றுக் கொண்டார். ஜெய்ப்பூரில் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பஜன் லாலுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து,துணை முதலமைச்சர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா பதவியேற்றனர்.

பதவி ஏற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பா.ஜ.க. ஆளும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர்கள் வசுந்துரா ராஜே, அசோக் கெலாட் பங்கேற்றனர். பதவி ஏற்கும் முன்பு தனது தந்தைக்கு பாதபூஜை செய்து பஜன்லால் சர்மா ஆசி பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments