2-ஆம் ஆண்டு காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிக்காக புறப்பட்ட முதல் சிறப்பு ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
2-ஆம் ஆண்டு காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிக்காக புறப்பட்ட முதல் சிறப்பு ரயிலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி கொடியசைத்து வழியனுப்பினார்.
வாரணாசியில் வரும் 17 ஆம் தேதி தொடங்கும் காசி சங்கமம் நிகழ்சிக்காக 7 சிறப்பு ரயில்களில் ஆயிரத்து 500 பேர் வாரணாசிக்கு பயணிக்க உள்ளதாகவும், முதல் ரயிலில் 216 பேர் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 30 ஆம் தேதி வரையில் நடைபெறும் காசி சங்கமத்தில் இலக்கியம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments