கேரளாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்றின் பாதிப்பான இருமல், தொண்டை வலி 3 அல்லது 4 நாட்களில் சரியாகி விடும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 3514

சிங்கப்பூர் மற்றும் கேரளாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்றினால் ஏற்படும் சளி இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்பு 3 அல்லது 4 நாட்களில் சரி ஆகிவிடும் என்பதால் மக்கள் அச்சமடைய தேவை இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் துறை சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பல்வேறு மாதிரியாக உருமாறி வருவதால் தற்போது பரவி வரும் வைரஸ் எந்த வகையானது என்பது கண்டறியப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments