சிறையில் இருந்த நபரை 3 ஆண்டுகளாக தேடி வந்த போலீஸார்... கைரேகை பதிவுகளை புதுப்பித்த போது தெரிய வந்த உண்மை

0 1744

திருட்டு வழக்கில் கைதான இளைஞர் ஒருவர் சிறையில் இருப்பது கூட தெரியாமல், அவரை மற்றொரு வழக்குக்காக 3 ஆண்டுகளாக சென்னை அரும்பாக்கம் போலீஸார் தேடி வந்துள்ளனர்.

அரும்பாக்கம் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு வீடு ஒன்றில் ஆறறரை லட்சம் ரூபாய் கொள்ளை போன வழக்கில் முக்கிய குற்றவாளியாக பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷை போலீஸார் தேடி வந்தனர்.

அதே காலகட்டத்தில், அவரை வேறொரு திருட்டு வழக்கில் திருமுல்லைவாயில் போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர். ஆனால், இந்த தகவல் தெரியாமல் அரும்பாக்கம் போலீஸார் விக்னேஷை தொடர்ந்து தேடி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைத்துறை நிர்வாகம் கைதிகளின் கைரேகைகளை கணினியில் புதுப்பித்தனர். அப்போது தான் விக்னேஷ் சிறையில் இருப்பதே அரும்பாக்கம் போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, விக்னேஷை சிறைக்கே சென்று போஸீலார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments