தமிழகத்தில் சிறைத்துறை டிஜிபி உள்ளிட்ட 11 உயர் காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

0 862

தமிழகத்தில் சிறைத்துறை டிஜிபி உள்ளிட்ட 11 உயர் காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக சிறைத் துறை டிஜிபியாக மகேஷ்வர் தயாள் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பதவியில் இருந்த அமரேஷ் புஜாரி, தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கூடுதல் டிஜிபி கல்பனா நாயக், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வு முகமை ஐஜி தர்மராஜன், சென்னை காவல் துறையின் கிழக்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஜி தமிழ்ச்சந்திரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும், ஐஜி பிரமோத்குமார், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். திண்டுக்கல் எஸ்பியாக பிரதீப், கள்ளக்குறிச்சி எஸ்பியாக சமயசிங் மீனா நியமிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments