எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்துள்ள கச்சா எண்ணெய்க் கழிவுகளால்... மீன் பிடித்தொழிலை மேற்கொள்ள பல மாதங்கள் பிடிக்கும் என மீனவர்கள் வேதனை

0 597

சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்துள்ள கச்சா எண்ணெய்க் கழிவுகள் முழுவதுமாக நீங்கி, பழையபடி மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள பல மாதங்கள் பிடிக்கும் என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான வீடுகள், படகுகள், வலைகளை நாசம் செய்துள்ள எண்ணெய்க் கழிவால் செய்வதறியாது தவிக்கும் மீனவர்கள், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீரிலும் நிலத்திலும் சுமார் 3 அடி ஆழத்துக்கு எண்ணெய்க் கழிவு கலந்துள்ளதாகக் கூறும் அவர்கள், மீன் உற்பத்தியே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் மாதக்கணக்கில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments