மக்களவைக்குள் 2 பேர் நுழைந்த விவகாரத்தில், பாதுகாப்பு பணியில் கவனக் குறைவாக இருந்ததாக மக்களவைச் செயலக ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்

0 676

மக்களவைக்குள் 2 பேர் நுழைந்த விவகாரத்தில், பாதுகாப்பு பணியில் கவனக் குறைவாக இருந்ததாக மக்களவைச் செயலக ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் புகுந்த 2 பேர் வண்ணப் புகை குப்பிகளை வீசினர்.

அவைக்குள் நுழைந்த 2 பேர், வெளியே ஆர்ப்பாட்டம் நடத்திய 2 பேர், அவர்களுக்கு உதவியாக இருந்த ஒருவர் ஆகிய 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய கூட்டாளியான லலித் ஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இவர்கள் 6 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடை சட்டமான உபாவின் கீழ் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் பகத்சிங் ரசிகர் கிளப் என்ற சமூக வலைதள பக்கம் மூலம் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments