புழல் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட பெண் கைதி தப்பி ஓட்டம்.. ஆண்கள் சிறை வழியாகத் தப்பிய நிலையில் சிறைவார்டன்கள் சஸ்பெண்ட்

0 1030

சென்னை புழல் சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி தப்பிச் சென்றுள்ளார்.

பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை கைதிகளைக் கணக்கெடுக்கும் போது ஜெயந்தி காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட போது, நேற்று காலை கைதிகள் நேர்காணல் நடத்தும் அறையை சுத்தம் செய்யும் பணியில் ஜெயந்தி ஈடுபட்டிருப்பதும், அதன்பின்பு ஆண்கள் சிறை வழியாக சென்று தப்பி இருக்கலாம் என தெரியவந்தது.

இதையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக புழல் சிறை பெண் வார்டன்கள் கனகலட்சுமி மற்றும் கோகிலா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments