ம.பி. முதலமைச்சராக மோகன் யாதவ் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்ப்பு

0 535

மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக மோகன் யாதவ் இன்று பதவியேற்றார்.

அவருக்கு, தலைநகர் போபாலில் உள்ள மோதிலால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் மங்குபாய் படேல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ராஜேந்திர ஷுக்லா, ஜெகதீஷ் தேவ்தா ஆகியோர் துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

அதேபோல், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

தலைநகர் ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜய் சர்மா மற்றும் அருண் சாவோ இருவரும் துணை முதலமைச்சர்களாகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

மூவருக்கும் மாநில ஆளுநர் விஸ்வபூஷண் ஹரிச்சந்தன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இரு மாநில முதல்வர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிகளில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments