வங்கியில் பணம் எடுக்கும் முதியவர்களை குறி வைத்து திருட்டு... சிறுவன் உள்பட 2 பேர் கைது

0 2306

வங்கியில் பணம் எடுத்து வரும் முதியவர்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்டதாக சிறுவன் உள்ளிட்ட 2 பேரை கள்ளக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் அவசர தேவைக்காக வங்கியில் நகைகளை அடகு வைத்து ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் எடுத்துச் சென்ற மூதாட்டியிடம், அந்தத் தொகையை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கொள்ளையடித்துச் சென்றனர்.

சி.சி.டி.வி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், பெரம்பலூரைச் சேர்ந்த நந்தா என்ற பழனிசாமி மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து அவர்களிடமிருந்த 45 ஆயிரம் ரொக்கம், திருட்டு பணத்தில் வாங்கிய புத்தம் புதிய செல்ஃபோன் மற்றும் திருட்டு டூவீலர் ஒன்றை பறிமுதல் செய்தனர்.

இருவரும் திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது பற்றி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments