மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்பு - ஆளுநர் மங்குபாய் படேல் பதவிப் பிரமாணம்

0 1158

மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக மோகன் யாதவ் இன்று பதவியேற்றார். அவருக்கு, தலைநகர் போபாலில் உள்ள மோதிலால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் மங்குபாய் படேல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ராஜேந்திர ஷுக்லா, ஜெகதீஷ் தேவ்தா ஆகியோர் துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக, மாநில பாஜக அலுவலகத்துக்கு வந்த மோகன் யாதவ், நாட்டை பிரதமர் மோடி வழிநடத்தும் பாதையை பின்பற்றி மத்திய பிரதேசத்தை வழிநடத்துவேன் எனத் தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments