வந்தவாசி அருகே ஏரியின் கரை திடீரென உடைந்து ஏராளமான நீர் வெளியேறி விவசாய நிலங்களில் பாய்ந்தது..!!

0 717

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஏரியின் கரை உடைப்பு ஏற்பட்டு ஏராளமான நீர் விவசாய நிலங்களில் பாய்ந்தது.

கீழ்கொடுங்காலூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியின் மதகு அருகே உள்ள கரை திடீரென உடைந்ததால் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறி விவசாய நிலங்களில் வீணாக பாய்ந்தது.

இதன் காரணமாக விவசாயிகள் பயன்படுத்த வேண்டிய 25 சதவீதம் தண்ணீர் வீணாக வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு சென்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மற்றும் மணல் மூட்டைகளை அடுக்கி ஏரியின் கரையை அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments