குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பங்கேற்க மாட்டார்.. அதிபர் தேர்தல் காரணமாக கலந்துக் கொள்ள வாய்ப்பில்லை என தகவல்..!!

0 767

குடியரசு தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்த விழாவில் கலந்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் குவாட் உச்சி மாநாடு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற இருந்த நிலையில் அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குவாட்டில் பங்கேற்க உள்ள ஜோ பைடன் குடியரசு தினவிழாவில் கலந்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலை ஜோ பைடன் சந்திக்க உள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடயே, ஜப்பான் அல்லது ஆஸ்திரேலிய பிரதமரை குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments