நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார்

0 1065

ஆருத்ரா நிதி நிறுவன வழக்கு தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

2438 கோடி ரூபாய் மோசடி புகார் தொடர்பாக கைதான நிதி நிறுவன முகவர் ரூசோ உள்ளிட்டோரை தனது செல்வாக்கை பயன்படுத்தி விடுவிப்பதாகக் கூறி 12 கோடியே 50 லட்ச ரூபாய் பெற்றார் என்பது ஆர்.கே.சுரேஷ் மீதான குற்றச்சாட்டு.

இது பற்றி விசாரிக்க அழைப்பாணை அனுப்பப்பட்ட நிலையில் ஆர்.கே. சுரேஷ் துபாயில் தலைமறைவானதாக கூறப்பட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் சுமார் 150 கேள்விகள் கேட்டு வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், வங்கிப் பரிவர்த்தனை உள்ளிட்ட 15 ஆவணங்களை அவரிடம் கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். புதனன்று ஆர்.கே. சுரேஷிடம் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments