ராமஜெயம் கொலை வழக்கில் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த நிலையில்... ரவுடி பிரபுவை வெட்டிக் கொன்ற 4 பேர் கும்பல்

0 2373

திமுக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை வளையத்தில் இருந்த ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். தென்னூர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்ற பிரபாகரன் ஆம்புலன்ஸ் வாடகைக்கு கொடுத்து வந்தார்.

இவர் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தன்னுடைய அலுவலகத்தில் நேற்றிரவு அமர்ந்திருந்தார். அப்போது முகமூடி அணிந்து ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரபு சரமாரியாக வெட்டியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை வளையத்திற்குள் இருந்த பிரபு, இன்று விசாரணைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments