FBI இயக்குனர் கிறிஸ்டோபர் சிபிஐ இயக்குனர் பிரவீண் சூட் ஆகியோர் எல்லைத் தாண்டிய குற்றங்களைத் தடுப்பது குறித்து ஆலோசனை

0 667

அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI யின் இயக்குனர் கிறிஸ்டோபர் வ்ரே தலைமையிலான அதிகாரிகள் குழு டெல்லியில் சிபிஐ தலைமையகத்தில் அதன் இயக்குனர் பிரவீண் சூட்டை சந்தித்து, நாடு தாண்டிய குற்றச்செயல்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

சைபர் கிரைம் குற்றங்கள், நிதிமோசடிக் குற்றங்கள், பணம் கேட்டு ஆள்கடத்தல் குற்றங்கள் மற்றும் பொருளாதாரக் குற்றங்கள் ஆகியவை குறித்து இருநாட்டு உயர் அதிகாரிகளும் விவாதித்தனர்.

ஆதாரங்களைப் பகிர்ந்துக் கொள்ளுதல் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர ஒத்துழைப்பு அளிப்பது குறித்து இருநாடுகளின் அதிகாரிகளும் உடன்பாடு கொண்டுள்ளதாக சிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments