தூத்துக்குடி மாவட்டம் இ.வேலாயுதபுரத்தில், ஊர்ப்பணம் 35 லட்ச ரூபாயை லாக்கரோடு திருட்டு

0 1451

தூத்துக்குடி மாவட்டம் இ.வேலாயுதபுரத்தில், ஊர்ப்பணம் 35 லட்ச ரூபாயை லாக்கரோடு திருடிச்சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

கருவேல மரங்களை ஏலம் விட்டு அதன்மூலம் ஈட்டப்படும் பணத்தை 7 சாவிகள் போட்டு திறக்கப்படும் லாக்கரில் பூட்டி திருமண மண்டபம் ஒன்றில் வைப்பதை அப்பகுதி மக்கள் வாடிக்கையக கொண்டுள்ளனர்.

ஊர் தலைவரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க கிராம மக்கள் தூத்துக்குடி சென்றபோது அதே கிராமத்தைச் சேர்ந்த சாலமன் ராஜ், கூட்டாளிகள் 3 பேருடன் சென்று லாக்கர் இருந்த மண்டபத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து லாக்கரை திருடியதுடன், தடுக்க முயன்றவர்களையும் அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments