குட்கா விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக நடிகர்கள் ஷாருக்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் ஆகியோருக்கு மத்திய அரசு நோட்டீஸ்

0 1519

குட்கா விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக நடிகர்கள் ஷாருக்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

குட்கா விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.

அலகாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கு விசாரணையில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் பாண்டே, குட்கா விளம்பர விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருவதாகவும், நடிகர்கள் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு மே 9-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments