தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தேதி தள்ளிவைப்பு

0 2491

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 13 ஆம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வுகள் துவங்கி நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளானதால் ஏற்கனவே தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், புதிய அட்டவணையை அறிவிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கணக்கெடுப்பு நடத்தி தேவையான மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் புதியதாக நோட்டுப்புத்தகம், சீருடை, புத்தகைப்பை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments