வெள்ள சூழ்நிலையை பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் கும்பல் கைவரிசை.. 6 வீடுகளின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை

0 2278

சென்னையை அடுத்த வரதராஜபுரத்தில் நிலவும் மழை வெள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள 6 வீடுகளின் பூட்டுக்களை உடைத்து 60 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்ததால், அதில் வசித்துவந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு உயிர் பயத்தில் வெளியேறினர்.

வெள்ளம் வடிந்தபின், அவர்கள் குடியிருப்புக்கு திரும்பியபோது வீடுகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு பணம் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இக்கொள்ளை சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments