மேட்ரிமோனி மூலம் விவாகரத்தான பெண்களிடம் திருமணம் செய்வதாக கூறி மோசடி.. ஒரே நாளில் 7 பெண்களை ஏமாற்றியபோது போலீசிடம் சிக்கினார்

0 1332

மதுரையில் மேட்ரிமோனி இணையதளத்தில் விவாகரத்தான பெண்களை திருமணம் செய்வதாக கூறி, ஏமாற்றி நகைகளை பறித்துச் சென்ற பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சூர் வணங்கனேந்தல் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் திருமணத் தகவல் இணையதளத்தில் தமது விவரங்களைப் பதிவிட்டபோது விவாகரத்தான பெண்கள் சிலர் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவர்களை ஓட்டல்களுக்கு வரவழைத்து லாவகமாக பேசி நகைகளை பெற்றுக்கொண்டு தலைமறைவாகி விடுவார் என கூறப்படுகிறது.

ஒரே நாளில் மதுரையில் உள்ள வணிகவளாகத்தில் காலை முதல் மாலை வரை 7 பெண்களை வரவழைத்து ஏமாற்றியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் தல்லாகுளம் மற்றும் கோ.புதூர் காவல்நிலையங்களில் புகார் செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவரை பிடிக்க முயன்ற போது கீழே விழுந்து ஒருகாலுக்கு கட்டு போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments