மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் யார்?.. நாளை நடைபெறும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு..!!

0 1226

மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் நாளை தேர்வு செய்யப்படுகிறார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த மாநில முதல்வரை தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், கட்சியின் ஓபிசி மோர்ச்சா தலைவர் கே.லட்சுமணன் மற்றும் ராஞ்சி மேயர் ஆஷா லக்ரா ஆகியோர் அடங்கிய மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக முதலமைச்சருக்கான போட்டியில் உள்ள மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் சிங் படேல் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சமீபத்தில் எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments