ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவ இடத்தில் இருந்த காவலர்களிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த திட்டம்

0 1208

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள், தடயவியல் துறையினர் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக சரித்திர பதிவேடு குற்றவாளியான கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டதை அடுத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் காவல்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தது. இதைத்தொடர்ந்து இன்று முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள், சம்பவ இடத்தில் தடயவியல் துறையினர் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் சம்பவ தினத்தன்று பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சில்வானு என்பவரை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச்சென்ற அதிகாரிகள், சம்பவத்தை நேரில் பார்த்தவரும் புகார் அளித்தவருமான தலைமைக் காவலர் மோகன் என்பவரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

பெட்ரோல் குண்டுவீச்சை நேரில் பார்த்து தடுத்த காவலர்கள், போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்டோரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments