வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிய அமெரிக்க அதிபரின் மகன்

0 1345

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீது மேலும் ஒரு வரி ஏய்ப்பு வழக்கு  பதிவு செய்யப்பட்டது.

53 வயதாகும் ஹன்டர் பைடன் மீது ஏற்கனவே 5 வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், தற்போது 12 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக புதிதாக ஒரு வழக்கை அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

முறையாக வரி செலுத்தாத ஹண்டர் பைடன், போதை மருந்து, கேளிக்கை விடுதிகள், சொகுசு கார்கள் என கோடிக்கணக்கான ரூபாயை வாரி இரைத்ததாகவும், போதை மறுவாழ்வு மையத்தில் மட்டும் 60 லட்ச ரூபாய் வரை செலவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், குற்றம் நிருபிக்கப்பட்டால் அவருக்கு 17 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments