திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி காலாவதி ஆனது என புகார்

0 1507

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி காலாவதி ஆனது என புகார் எழுந்துள்ளது.

பூவிருந்தவல்லி மற்றும் மேல்மணம்பேடு ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட 333 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, போர்வை உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

இதில் திருமழிசையில் வழங்கப்பட்ட அரிசி காலாவதியானதாக புகார் எழுந்துள்ளது. அமைச்சர் காந்தி வழங்கிய அரிசியில் பேக்கிங் தேதி 05/22 என்றும் காலாவதி தேதி 04/23 என்றும் குறிப்பிட்டு இருந்தது .

பலர் இது தெரியாமல் வாங்கி சென்ற நிலையில், ஒரு சிலர் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது மழுப்பலாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments