செங்கல்பட்டில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வு மையம் தகவல்

0 1154

செங்கல்பட்டு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 புள்ளி 2 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் தரையில் இருந்து பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நில நடுக்கம் ஏற்பட்டதை உணர முடியவில்லை என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், நில அதிர்வு தகவல் அச்சத்தை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments