சென்னை மாநகர மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்... குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தல்

0 8521

சென்னை மாநகர மேயரை பொதுமக்கள் முற்றுகையிட்டு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.

சென்னை பெரம்பூர் - திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணன்தாஸ் சாலையில் மேயர் பிரியா ராஜன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் 71வது வார்டு கிருஷ்ணர் தாஸ் சாலை, மங்களபுரம், திருவள்ளுவர் தெரு, ஏகாந்திபுரம், அம்பேத்கார் தெரு, பனைமரத் தொட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மேயரின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து 3 நாட்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லை, கழிவுநீர் செல்ல வழிவகை இல்லை, மழை நீர் அகற்றப்படவில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேயரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்களிடம் பேசிய மேயர் பிரியாராஜன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து பேசி பிரச்சனைகளை சரி செய்ய நூறு சதவீதம் முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்ததும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments