தீவிரவாத நிகழ்வுகள் நடப்பாண்டில் மிகவும் குறைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல்

0 721

இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நிகழ்வுகள் குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்து மூலம் பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்தராய், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான அணுகுமுறையை அரசு கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் நித்யானந்தராய், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments