நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக தீவிரவாதி பன்னுன் மிரட்டல்

0 1334

 டிசம்பர் 13ம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளான்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் ஏர்இந்தியா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக பன்னுன் மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments