கைகோர்ப்போம்... துயர்துடைப்போம்...! வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணி செய்ய மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தல்

0 2271

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து உதவி கேட்டு குரல்கள் வந்தவண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ள நடிகர் விஜய், அரசு முன்னெடுக்கும் மீட்புப் பணிகளில்  ஈடுபடுமாறு தமது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருப்பதாக எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் உணவு அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பதாக தகவல்கள் வந்திருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments