கார் பந்தயத்துக்கு ரூ. 42 கோடி செலவு செய்வது வீண்.. மழை பாதிப்புகளுக்கு நடுவே கார் பந்தயம் அவசியமா? : இ.பி.எஸ் கேள்வி

0 2559
கார் பந்தயத்துக்கு ரூ. 42 கோடி செலவு செய்வது வீண்.. மழை பாதிப்புகளுக்கு நடுவே கார் பந்தயம் அவசியமா? : இ.பி.எஸ் கேள்வி

அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி இல்லை என்று கூறி விட்டு, கார் பந்தயத்துக்கு 42 கோடி ரூபாய் அரசு நிதி வீண் செலவு செய்யப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை பாதிப்புகளுக்கு நடுவே கார் பந்தயம் அவசியமா என்று கேள்வி எழுப்பினார்.

கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தி.மு.க.காரரைப் போல செயல்படுவதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, பேரவையில் மரபுகள் அனைத்தையும் மீறி, அமைச்சர்கள் கூற வேண்டிய பதில்களைக் கூட சபாநாயகரே தெரிவிப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments