மிக்ஜம் புயல் எச்சரிக்கையையொட்டி மீட்புப் பணிக்கு பயிற்சி பெற்ற 18,000 காவலர் மற்றும் கமாண்டோ படையினர் தயார்

0 1329

மிக்ஜம் புயல் எச்சரிக்கையையொட்டி, மீட்பு நடவடிக்கை பயிற்சி பெற்ற 18 ஆயிரம் காவலர்கள் மற்றும் கமாண்டோ படையினர் தயார் நிலையில் உள்ளதாக தமிழகக் காவல் துறை தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும்போது ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கனமழை, வெள்ளப்பெருக்கில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்து காவலர்கள் மற்றும் கமாண்டோ படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி பெற்ற காவலர்கள் மாநில பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து செயல்படுவதற்காக பல்வேறு குழுக்களாகப் பிரித்து தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழகக் காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பயிற்சி பெற்ற காவலர்கள் சென்னை முட்டுக்காடு பகுதியில் மீட்பு நடவடிக்கை ஒத்திகையில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments